ராமேஸ்வரம்: கடலுக்கு சென்ற 8 மீனவர்களை காணவில்லை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்களைக் காணவில்லை. அவர்களது கதி என்னஆனது என்று தெரியவில்லை.
கடலில் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. 45 நாட்களாக அமலில் இருந்த இந்தத் தடை நேற்று முன்தினம் தான் விலக்கப்பட்டது.
இதையடுத்து கடலில் கொந்தளிப்பு அதிகம் நிலவியபோதிலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச்சென்றனர். ஆனால், இதில் இரண்டு நாட்டுப் படகுகள் மட்டும் திரும்பி வரவில்லை.
அதில் இருந்த 8 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. கடலில் சூறாவளிக் காற்று வீசி வருவதால்அவர்களின் படகு திசை மாறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications