அமெரிக்கா- தமிழகம் பொருளாதார உறவு: ஜெ. பெருமை
சென்னை:
தமிழகத்தில் அமெரிக்க முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். மேலும் வெளிநாடுகளில் இருந்துநேரடி முதலீடு பெறுவதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதாக ஜெயலலிதா பெருமையுடன் தெரிவித்தார்.
சென்னை தரமணியில் அமெரிக்க சர்வதேச பள்ளி ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, அந்த பள்ளியை திறந்து வைத்துஜெயலலிதா பேசியதாவது:-
வெளி நாடுகளில் இருந்து நேரடியாக முதலீடு பெறுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவைச்சேர்ந்த பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருகின்றன. இதனால் அமெரிக்காவுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான வர்த்தகஉறவு பலமடைந்து வருகிறது.
இது போன்ற சர்வதேச பள்ளிகள் மூலமும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் அதிக முதலீடுகளைப் பெற முடியும் என்று ஜெயலலிதாபேசினார்.
அமெரிக்கா உதவியுடன் ரூ. 25 கோடியில் உருவாகியுள்ள இந்தப் பள்ளி சர்வதேச பொருளாதார விவகாரங்கள் குறித்துப் பயில உதவும்.இது வரும் ஜூலை மாதம் முதல் செயல்பட ஆரம்பிக்கும்.












Click it and Unblock the Notifications