எஸ்.எஸ்.எல்.சி: தோல்வியடைந்தவர்களுக்கு உடனே மறுதேர்வு
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் பெயில் ஆனவர்கள் சிறப்பு துணை தேர்விற்குவிண்ணப்பிக்கலாம். இந்த துணை தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், இந்த ஆண்டு முதலே தங்கள் உயர்படிப்பை தொடரலாம்என்று அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு பெரும் வரப் பிரசாதமாக வந்துள்ள இத் திட்டம் குறித்து தேர்வுத் துறை இயக்குனர் சி. பழனிவேலு கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் பெயில் ஆனவர்கள் சிறப்பு துணை தேர்விற்குவிண்ணப்பிக்கலாம். இந்த துணை தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், இந்த ஆண்டு முதலே தங்கள் உயர்படிப்பை தொடரலாம்.
இந்த தேர்வு எழுதி பயன் பெற விரும்புபவர்கள், இன்று முதல் இம்மாதம் 8 -ம் தேதிக்குள், சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரியைசந்தித்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம். ஒரு பாடமானாலும், இரண்டு பாடங்களானாலும் 125ரூபாய் தேர்வுக் கட்டணம்செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தேர்வு இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் நடத்தப்படும். தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
இதே போல் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இன்டியன் மாணவர்களுக்கு இந்த தேர்வு எழுதி பயன் பெறலாம், மெட்ரிக் மாணவர்கள்ஒரு பாடத்திற்கு 135 ரூபாயும் இரண்டு பாடங்களுக்கு 235 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆங்கிலோ இன்டியன் மாணவர்கள் ஒரு பாடத்திற்கு 85 ரூபாயும் இரண்டு பாடங்களுக்கு 135 ரூபாயும் கட்டணமாக செலுத்தவேண்டும்.
ப்ளஸ் 2 தேர்வில் விடைத்தாளின் நகல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, இம்மாதம் 7ஆம் தேதிக்குள் விடைத்தாள்களின் நகல்அனுப்பி வைக்கப்படும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நகல் கிடைத்த 2வேலைநாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு பழனிவேலு தெரிவித்தார்.
இதனால் எஸ்.எஸ்.எல்.சியில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் ஓராண்டை வீணாக்க வேண்டியஅவசியமில்லை. மீணடும் உடனே தேர்வெழுதி வென்று இந்த ஆண்டே பிளஸ் ஒன்னில் சேர்ந்துவிடலாம்.












Click it and Unblock the Notifications