திருச்சி அருகே காலரா நோய்த் தாக்குதல்: 2 பேர் பலி
திருச்சி:
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தில் காலரா காரணமாக ஒரு பெண் உள்பட 2 பேர் இறந்தனர்.
சிறுவல்லூர் என்ற கிராமத்தில் திடீரென காலரா நோய் தாக்கியது. இந்த ஊரைச் சேர்ந்த 30 பேர் காலாராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும்வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதையடுத்து இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இவர்களில் ரங்கநாதன் என்பவரின் மகள் பிரியா (வயது 9) மற்றும் வீரராஜூ (வயது 79) ஆகியோர் சிகிச்சை பலனின்றிஇறந்துள்ளனர்.
இந்த ஊரில் குடிநீர் கெட்டுப் போனதால் காலரா நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இச் சம்பவத்தையடுத்து சிறுவல்லூர் கிராமத்தில் டாக்டர்கள் குழு வும் முகாமிட்டுள்ளது. கிராமத்தில் உள்ள குடிநீர் கிணறுகளில் மருந்துஅடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
காலரா நோய் காரணமாக இந்த ஊரில் அனைவரும் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.