ஸ்டாலின் பதவிப் பறிப்பு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை:
ஸ்டாலினைக் குறி வைத்து முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு நபர்-ஒரு பதவி சட்டத்துக்கு தமிழக ஆளுநர்ராம்மோகன் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
உள்ளாட்சிப் பதவிகளில் இருப்பவர்கள் எம்.எல்.ஏவாக இருக்க முடியாது என்ற சட்டம் கடந்த மாதம்சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்துக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.
இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் தரக் கூடாது என ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கைவிடுத்திருந்தன. ஆனால், இச் சட்டத்துக்கு ஆளுநர் நேற்று இரவு ஒப்புதல் அளித்துவிட்டார்.
இதனால் அடுத்த இரு வாரங்களில் ஸ்டாலின் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும். அல்லதுஅவரது பதவியை அரசே பறிக்கும்.
அதே போல போக்குவரத்து ஊழியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தடை செய்யும்சட்டத்துக்கும், பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்துக்கும் ஆளுநர் தனது ஒப்புதலைஅளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications