நாளை வாக்கு எண்ணிக்கை
சென்னை:
மறு தேர்தலையொட்டி சைதாப்பேட்டையில் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. 19 கம்பெனி மத்தியரிசர்வ் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட்டனர்.
இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணியோடு முடிந்தது. வாக்குப் பதிவுமுடிந்தவுடன் எல்லா எலெக்ட்ரானிக் வாக்குப் பதிவு எந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இங்கு தான நாளை ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். காலை 11மணிக்குள் முடிவு தெரிந்துவிடும்.
இன்று ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 25 சி.ஆர்.பி.எப். போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தொகுதியில்பாதுகாப்புப் பணியில் வெளி மாவட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை போலீசாரை நிறுத்த தேர்தல் கமிஷன் தமிழக அரசுக்கு தடை விதித்துவிட்டது.
அனைத்து வேட்பாளர்களும் புதிய பூத் ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதால்புதியவர்கள் வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அதிமுக சார்பில் நடிகர் ராதாரவி, திமுக சார்பில் மா. சுப்ரமணியம், மதிமுக சார்பில் பா. சுப்பிரமணி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications