மாநகராட்சி மேயர் VS
மதுரை:
மதுரை மாநகராட்சி ஆணையர் ஹர்சஹாய் மீனாவுக்கும், மேயர் செ.ராமச்சந்திரனுக்கும் இடையே நடக்கும் பனிப்போரால் மதுரையில்எந்தவிதமான வளர்ச்சித் திட்டமும் அமலாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அத்தோடு யார் சொல்வதைக் கேட்பது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பிப் போய் திரிவதால் மாநகராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துப்போய்க் கிடக்கிறது.
சென்னை மாநகராட்சி மேயர் ஸ்டாலினுக்கும் ஆணையர்களுக்கும், துணை மேயருக்கும் இருந்து வரும் மோதல் உலகறிந்த விஷயம்.
இப்போது மதுரை மாநகராட்சியிலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. கமிஷ்னரை ஒடுக்குவதற்காக அவர் மீது மேயரின்ஆதரவாளர்களால் செக்ஸ் புகார் கூட செட்-அப் செய்யப்பட்டது. அது தவறான புகார் என்பது தெரிந்துவிட்டது.
தன் மீது தவறான குற்றம் சுமத்தி பெயரைக் கெடுக்க முயன்றதால் கடுப்பில் உள்ள கமிஷ்னர் இப்போது மேயரையும் அவருக்கு ஆதரவானகவுன்சிலர்களையும் இன்னும் அதிக காட்டத்தோடு நடத்த ஆரம்பித்துள்ளார்.
ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், கவுன்சிலர்களை ஆணையர் ஹர்சஹாய் மீனா மதிப்பதேயில்லை என்று புகார்கூறப்பட்டு வருகிறது. இப்போது அவர் மீதான புகார் மேலும் வலுத்துவிட்டது.
ஆளும்கட்சி, எதிர்க் கட்சி என்று பார்க்காமல் பணம் சுருட்ட நினைக்கும் எல்லோரையுமே கமிஷ்னர் கட்டுபபடுத்துவதாகக் கூறப்படுகிறது.இதனால், திமுக, அதிமுக என கட்சி பேதம் இல்லாமல் அனைத்து கவுன்சிலர்களும் அவரை குறை கூறி வருகின்றனர்.
கமிஷ்னர் பொறுப்புக்கு வந்தது முதலே ஹர்சஹாய் மீனா, மேயர் ராமச்சந்திரனை மதிப்பதில்லை என்ற பேச்சும் நிலவுகிறது. எந்தவிஷயமாக இருந்தாலும் மேயரை கலந்து ஆலோசித்த பிறகுதான் செய்ய வேண்டும் என்ற மரபு இருந்தாலும் அதை ஹர்சஹாய் மீனாகடைப்பிடிப்பதில்லை.
இதனால் மேயரும், கமிஷ்னரிடம் எதுவும் கேட்பதில்லை.
வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்து கமிஷ்னரிடம் கவுன்சிலர்கள் விசாரிக்கப் போனால் அவர்களை பார்க்கவே ஹர்சஹாய் மீனாமறுப்பதாக கவுன்சிலர்கள் புலம்புகிறார்கள்.
இந்த மோதலால் மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய்க் காணப்படுகிறது. ஒரு நலத் திட்டம் உருப்படியாக நடக்கவில்லை.
சமீபத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் குழுவுடன் சென்னை சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார் மேயர் ராமச்சந்திரன்.மதுரை நகரின் வளர்ச்சித் திட்டத்திற்குத் நிதி ஒதுக்கித் தருமாறு அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
யாருமே எதிர்பாராத வகையில் மதுரை வளர்ச்சிக்கு முதல் கட்டமாக கடந்த வாரம் ரூ. 2 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
ஆனால் இந்த மோதல் காரணமாக பணத்தை செலவிடுவது தொடர்பான திட்டங்களை தீட்ட முடியாமல் மாநகராட்சி கவுன்சில் முழித்துக்கொண்டுள்ளது, ஆணையரின் ஒத்துழைப்பின்மையே இதற்குக் காரணம் என்கின்றனர் கவுன்சிலர்கள்.
இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவே தலையிட்டு ஆணையருக்கும், மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கும் இடையே பிரச்சனையைஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மதுரை நகர மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும்.