சாப்பாட்டு பிரச்சனை: மணப்பெண்ணின் தந்தைக்கு அரிவாள் வெட்டு- மாப்பிள்ளை கைது
சென்னை:
கல்யாண சாப்பாடு தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் மணமகளின் தந்தைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கல்யாணமும் நின்றது.மணமகனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அருகே உள்ள பல்லாவரத்தைச் சேர்ந்த சாமிநிாதன் என்பவருக்கும், உத்திரமேரூரைச் சேர்ந்த உமா என்ற பெண்ணுக்கும்திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று கல்யாணம் நடப்பதாக இருந்தது.
இதையொட்டி நேற்று முன் தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது மணமகன் வீட்டார் சாப்பாட்டுக்கு ஏற்பாடுசெய்திருந்தனர். ஆனால் சாப்பாடு சரியில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பெண்ணின் அண்ணன் செல்வகுமாரிடம் விருந்தினர்கள் புகார் செய்துள்ளனர். இதையடுத்து என்ன மாப்பிள்ளே, சாப்பாடுசரியில்லாமல் போய் விட்டதே என்று சாமிநாதனிடம், செல்வகுமார் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த சாமிநாதன், செல்வகுமாரை தாறுமாறாக திட்டியுள்ளார். இது பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்துமாப்பிள்ளை சாமிநாதனை பெண்ணின் அண்ணன் செல்வகுமார் அடித்துள்ளார்.
இதையடுத்து வெளியே சென்ற சாமிநாதன் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களை அழைத்து வந்து செல்வகுமாரை சரமாரியாகதாக்கியுள்ளார். இதை விலக்க வந்த மணப் பெண்ணின் தந்தையை மாப்பிள்ளை சாமிநாதனே அரிவாளால் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கல்யாண வீட்டில் நடந்த இந்த வன்றைக் கலாட்டாவால் அதிர்ந்து போன அப்பகுதி மக்கள் போலீஸாருக்குப் புகார் கொடுத்தனர்.போலீஸார் விரைந்து வந்து மாப்பிள்ளை சாமிநாதன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
இதனால் கல்யாணம் நின்று போய்விட்டது. ஆட்டோ டிரைவர் கும்பலால் தான் கலாட்டா பெரிதாகியுள்ளது. கல்யாண வீட்டில் இருகுடும்பத்தினர் இடையே நடந்த சண்டையில் கூலிக்கு வந்த இந்தக் கும்பல் தலையிட்டு கலாட்டாவை பெரிதாக்கியது.












Click it and Unblock the Notifications