For Daily Alerts
Just In
38.28 சதவீத வாக்குகள் பதிவு
சென்னை:
சைதாப்பேட்டையில் நேற்று நடந்த மறு வாக்குப் பதிவில் 38.28 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
இங்கு வியாழக்கிழமை 58 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடந்தது.
இதில் வாக்களிக்க 60,000 வாக்காளர்களுக்கு உரிமை இருந்தது. ஆனால், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை வாக்குப் பதிவு படு மந்தமாகஇருந்தது.
இவர்களில் வெறும் 38.28 சதவீத மக்களே நேற்று மறுபடியும் ஓட்டு போட வந்தனர்.
கடந்த மாதம் 31ம் தேதி நடந்த வாக்குப் பதிவின்போது 52 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
Comments
Story first published: Friday, June 7, 2002, 5:30 [IST]