சென்னையில் முடியாதது நெல்லையில் முடிந்தது
திருநெல்வேலி:
நவீன மருத்துவ வசதிகள் நிறைந்த சென்னையில் செய்ய முடியாது என்று கூறப்பட்ட ஒரு அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகமேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறார் திருநெல்வேலி டாக்டர்.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குயூனி. 36 வயதாகும் இந்தப் பெண்ணுக்கு சில காலமாகவே கடுமையான வயிற்றுவலி இருந்தது. இதனால் அவர் சென்னைக்கு வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் செய்து பார்த்தார்.
அப்போது அவரது கருப்பையில் பெரிய கட்டி இருப்பது தெரிய வந்தது. கட்டியை அகற்ற வேண்டுமானால் கருப்பையுடன் சேர்த்துத்தான்முடியும் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். ஆனால் கருப்பையை அகற்றுவதில் உடன்பாடு இல்லாத குயூனி மீண்டும் நெல்லை வந்தார்.
பாளையங்கோட்டையில் உள்ள டாக்டர் ஏக்னஸ் என்பவரிம் னது பிரச்சினை குறித்துக் கூறினார். அதைக் கேட்டதும் சில சோதனைகளைமேற்கொண்ட டாக்டர் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை ஆபரேஷன் செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து சமீபத்தில் நடந்த ஆபரேஷனின்போது, சில நவீன சாதனங்களின் உதவியுடன் குயூனியின் கருப்பையில் இருந்த கட்டிவெற்றிகரமாக அகற்றப்பட்டது. கட்டியின் எடை 2 கிலோ இருந்தது.
குயூனி இப்போது நலமுடன் உள்ளார், அவரது கருப்பையும்தான்.












Click it and Unblock the Notifications