வீரப்பன் காட்டுப் பகுதியில் இறந்து கிடந்த யானை
Subscribe to Oneindia Tamil
அந்தியூர்:
வீரப்பன் நடமாடி வரும் காட்டுப் பகுதியில் ஒரு பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
தர்மபுரி மாவட்டம் பர்கூர் அருகே வரட்டுப்பள்ளம் என்ற இடத்தில் காட்டுப் பகுதிக்குள் யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
காட்டுப் பகுதியில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் இதைத் தெரிவித்தனர். இதையடுத்து யானையின் உடலைத் தேடிவனத்துறையினர் சென்றனர். அந்த உடல் குட்டைமலை என்ற இடத்தில் கிடந்தது.
கால்நடை மருத்துவர்களைக் கொண்டு சோதனை நடத்தியதில் அது பெண் யானை என்பதும் அதற்கு 20 வயதுஇருக்கலாம் என்றும் தெரியவந்தது.
ஆண் யானையைத் தான் தந்ததிற்காக மீசை கும்பல் சுட்டு வீழ்த்துவது வழக்கம். பெண் யானையின் இந்த மர்மச்சாவுக்கான காரணம் தெரியவில்லை. இது இயற்கையாக இறந்ததா என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள்சோதனையிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications