டெபாசிட்டும் மதிமுகவும்
சென்னை:
சைதாப்பேட்டையில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் பா.சுப்பிரமணி டெபாசிட் தொகையை இழந்து தனதுகட்சியின் பலத்தை நிரூபித்துள்ளார்.
மதிமுக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அந்தக் கட்சி எம்.எல்.ஏ. தேர்தல் எதிலுமே வென்றதில்லை. திமுககூட்டணியில் 4 எம்.பி. தொகுதிகளில் போட்டியிட்டு 3 இடங்களில் வென்றது.
அதற்கு முன்பும் பின்னும் அக் கட்சி போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோல்வி தான். பல இடங்களில்டெபாசிட்டை கூட அந்தக் கட்சி திரும்பப் பெற்றதில்லை.
இப்போது சைதாப்பேட்டையிலும் மதிமுக வேட்பாளர் பா.சுப்பிரமணி வெறும் 2,235 வாக்குகள் தான்பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நந்தகோபால் கூட இவரை விட அதிகமாக 4,154வாக்குகள் பெற்றுள்ளார்.
இதன் மூலம் சைதாப்பேட்டையிலும் டெபாசிட்டை இழந்துள்ளது மதிமுக.
இங்கு வைகோ விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்தும் டெபாசிட்டை காப்பாற்ற முடியவில்லை.












Click it and Unblock the Notifications