இது தோல்வியே அல்ல: கருணாநிதி
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் எங்களுக்குக் கிடைத்தது தோல்வியும் அல்ல, ஜெயலலிதாவுக்குக் கிடைத்ததுவெற்றியும் அல்ல என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அவர் கூறுகையில்,
இது முஷாரப் பாணி ஜனநாயகம். இது மற்ற மாநிலங்களுக்கும் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுஜனநாயகத்தில் அக்கறை உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் கமிஷன் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை. சைதாப்பேட்டையில் மொத்தமுள்ள 250க்கும் மேற்பட்டவாக்குச் சாவடிகளில் 57 வாக்குச் சாவடிகள் முழுமையாக அதிமுகவினரால் கைப்பற்றப்பட்டன.
இதனால் தான் தொகுதி முழுவதும் மறு தேர்தல் கேட்டோம். அப்படி மறுதேர்தல் கோரியபோது சுட்டிக் காட்டிய 57வாக்குச் சாவடிகளில் 17ல் மட்டுமே மறு தேர்தல் நடத்தினார்கள். மற்ற 40 வாக்குச் சாவடிகளையும் தங்கள்இஷ்டத்துக்கு கமிஷன் முடிவு செய்து கொண்டது.
எங்கள் கோரிக்கையை ஏற்றது போல பாவ்லா காட்டிவிட்டது தேர்தல் கமிஷன். அடிப்படைத் தவறே தேர்தல்கமிஷனுடையது தான்.
ஆண்டிப்பட்டி தேர்தலில் இருந்தே தேர்தல் கமிஷன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்துவிட்டது.இதற்கு என்ன காரணம என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், எங்களிடம் பணம் இல்லை என்பதை மட்டும்சொல்லிக் கொள்கிறேன்.
திருட்டு ஓட்டு போட்டவர்கள் பெற்ற வெற்றி இது. இதனால் இதை திமுக தோல்வியாக எடுத்துக் கொள்ளாதுஎன்றார் கருணாநிதி.