ரயில் பயணிகளுக்கு "அல்வா" கொடுத்து திருட்டு
சென்னை:
ஒரிஸ்ஸாவிலிருந்து ரயிலில் சென்னைக்கு வந்த பயணிகளிடம் பாதாம் அல்வா கொடுத்து அவர்களது பணம்,பொருட்களை ஒரு கும்பல் திருடிச் சென்றது.
ஒரிஸ்ஸா மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் பெஹ்ரா. இவரது மனைவி மெஹந்தி. இருவரும் கல்லூரிப்பேராசிரியர்கள்.
இவர்கள் இருவரும் தங்களது மகன் பரம்பிந்தன் என்பவருடன் ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்குவந்தனர்.
ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை அடைந்தபோது 3 பேரும் மயக்க நிலையில் மீட்கப்பட்டனர். உடனடியாகஅவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து திருட்டு நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர். அவர்களதுசந்தேகம் இப்போது ஊர்ஜிதமாகியுள்ளது.
பரம்பிந்தன் மயக்கம் தெளிந்து எழுந்தபின், ரயிலில் வந்து கொண்டிருந்த போது தங்களுக்கு சிலர் பாதாம் அல்வாகொடுத்ததாகவும் அதைச் சாப்பிட்ட பின் மயங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
அவர்கள் கொண்டு வந்திருந்த பணம் மற்றும் சில விலை மதிப்பற்ற பொருட்களும் திருடப்பட்டு விட்டன.