For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 11ம் தேதி ரணில்- ஜெயலலிதா சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை வரும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைச் சந்திப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தனதுடெல்லி பயணத்தை ஒரு நாள் தள்ளி வைத்துள்ளார்.

முன்னதாக 11ம் தேதி ஜெயலலிதா டெல்லி செல்ல இருந்தார். அன்றைய தினம் தான் தனது இந்தியப் பயணத்தைமுடித்துக் கொண்டு ரணில் சென்னை வழியாக இலங்கை திரும்புகிறார்.

இதனால் இந்தச் சந்திப்பு வாய்ப்பில்லை என ஜெயலலிதா கூறியிருந்தார். இந் நிலையில் ரணில்விக்கிரமசிங்யேயை சந்தித்துப் பேச ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

இருவரும் வரும் 11ம் தேதி மாலை கவர்னர் மாளிகையில் ரணில் விக்கிரமசிங்கேயை ஜெயலலிதா சந்தித்துப்பேசுகிறார்.

புலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி வருபவர் ஜெயலலிதா. புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து,பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் மீதான தடையையும் விலக்கி, யாழ்பாணத்தில் புலிகள் தலைமையில் இடைக்காலஆட்சியை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பவர் ரணில்.

எனவே, இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X