ஆளுநருடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று ஆளுநர் ராம்மோகன் ராவை கவர்னர் மாளிகையில் சென்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்கான காரணம் தெரியவில்லை. நாளை சென்னை வரும் இலங்கைப் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கே ஆளுர் மாளிகையில் தான் தங்குகிறார். அங்கு தான் ரணிலை ஜெயலலிதா சந்தித்துப் பேசவுள்ளார்.
இந் நிலையில் இன்று இந்தச் சந்திப்பு நடந்தது. சுமார் 15 நிமிடங்கள் ஜெயலலிதா அங்கிருந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் ஸ்டாலின் பதவியைப் பறிக்கும் ஒரு நபர்-ஒரு பதவிசட்டம், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தடை செய்யும் சட்டம் ஆகியவற்றுக்கு ஆளுநர் எந்தவித எதிர்ப்பும்இன்றி ஒப்புதல் அளித்தார். இதற்கு நன்றி தெரிவிக்க ஜெயலலிதா அங்கு சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால், ஆளுநரை ஜெயலலிதா சந்தித்துவிட்டுத் திரும்பியதையடுத்து கோட்டையில் அமைச்சர்கள் இடையேபெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாருடைய சீட்டையாவது கிழிக்க ஏற்பாடு நடக்கிறதோ என்ற பயம்பரவியுள்ளது. இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் சில அமைச்சர்களின் செயல்பாட்டில் ஜெயலலிதா அதிருப்திஅடைந்துள்ளார். இந் நிலையில் இந்தச் சந்திப்பு அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.