எல்லை தாண்டும் மீனவர்கள்: தடுக்க கடலில் ஒரு எல்லைக் கோடு
புதுக்கோட்டை:
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் வழி தவறிவிடாமல் தடுக்கவும், எல்லை தாண்டி செல்லாமல் தடுக்கவும் நடுக் கடலில்மிதவைகளைக் கொண்டு எல்லைக் கோடு போடப்படவுள்ளது.
இதற்காக தமிழக அரசு ரூ. 1.5 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக மாநில மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழக மீனவர்கள் அடிக்கடி இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிஇலங்கைப் பகுதிக்குள் சென்று விடுகின்றனர். இதனால் பல சமயங்களில் அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்து விடுகின்றன.
இதைத் தடுக்கும் வகையில் கடலில் சிவப்பு எல்லைக் கோடு போட அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இந்த எல்லைக் கோட்டில் உள்ள மிதவைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இரவில் அதில் பளீர் என விளக்குகள் எரியும்.
இதைத் தாண்டிச் செல்லாமல் மீனவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 1.30 கோடி செலவில் புதிய மீன் பிடி துறைமும் அமைக்கப்படும் என்றார் அவர்.