ஜெ. மீது புகார் தந்த அதிகாரி டப்பா பதவிக்கு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.சங்கருக்கு நீண்ட நாள் விடுப்பு கொடுத்ததோடு பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் வேண்டிய,வேண்டாத இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் நன்மை சில அதிகாரிகள் சசிகலாவின் ஆசி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கற்பூரசுந்தரபாண்டியன். சசிகலா குடும்பத்தின் பரிபூரண ஆசி பெற்ற இந்த சர்ச்சைக்குரிய அதிகாரி போக்குவரத்துத்துறைசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத் தலைவரான ஆதிமூலம் பழிவாங்கப்பட்டுள்ளார். இவருக்கு உப்புச் சப்பில்லாத தொல்பொருள் மற்றும்வரலாற்று ஆராய்ச்சித்துறையின் சிறப்பு கமிஷனர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சாட்டையால் அடித்து ஐ.ஏ.எஸ. அதிகாரிகளை வேலைவாங்குகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா பேசியதைக் கண்டித்து தலைமைச் செயலாளர் சங்கரிடம் புகார் மனு கொடுத்து பரபரப்புஏற்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாநகராட்சியில் திமுக மேயருக்கு தலைவலி தந்து வந்த ஹர்சகாய்மீனா வருவாய்த்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இருந்த மதுரை மாநகராட்சி பதவியில் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் புதிய கமிஷனராக கலைவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் தற்போதைய கமிஷனர்ராமநாதன் ஜவுளி மற்றும் தொழில்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறையின் செயலாளராக நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய ஆச்சார்யலு, தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரியத் தலைவர் மற்றும் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர்தான் கருணாநிதி மீது வழக்குப் போட்டவர் மற்றும் சென்னை மேயர் ஸ்டாலினுடன் அடிக்கடி மோதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிலருக்கு பதவி உயர்வுடன் மாற்றம் தரப்பட்டுள்ளது.

மொத்ததில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளி கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+