கிளைடர் விபத்தில் இறந்த என்.சி.சி. மாணவி குடும்பத்துக்கு நிதியுதவி
சென்னை:
சென்னை தாம்பரத்தில் பயிற்சி விமானம் கீழே விழுந்ததில் இறந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு என்.சி.சி சார்பில் ரூ. 2 லட்சம்நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் கிளைடர் விமானம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சென்னைகுருநானக் கல்லூரி என்.சி.சி. மாணவி சத்யா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தார். அவருடன் பயிற்சியாளர் கேப்டன் பவேஜாவும்இறந்தார்.
மாணவி சத்யாவின் இறுதிச் சடங்குகள் தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கம் என்ற இடத்தில் திங்கள்கிழமை நடந்தது.
இந்த இறுதிச் சடங்கில் தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி பிராந்திய என்.சி.சி. கமாண்டர் ஹாரிஸ் கெளல் கலந்து கொண்டார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவி சத்யாவும், சிறந்த பயிற்சியாளரான பவேஜாவும் இறந்தது மிகுந்த வருத்தம் தருகிறது.அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவி சத்யாவின் குடும்பத்துக்கு என்.சி.சி. நல நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றார்.
இதற்கிடையே இவ்விபத்தில் பலியான கேப்டன் பவேஜாவின் உடலும் இன்று காலை முழு ராணுவ மரியாதையுடன் சென்னைபெசன்ட் நகர் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ராணுவ உயர் அதிகாரிகள் பவேஜாவின் உடலுக்கு மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications