ஊனற்றோருக்கு ஊட்டியில் ரூ. 1 கோடியில் வீடுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீலகிரி மாவட்டத்தில் உடல் ஊனமுற்றோருக்காக ரூ. 1 கோடியே 60 லட்சம் செலவில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக மாவட்டஆட்சித் தலைவர் சுப்ரியா சாஹு கூறியுள்ளார்.
ஊட்டியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் தான் தமிழகத்திலேயே முதல் முறையாக உடல்ஊனமுற்றோர் குறித்த கணக்கெடுப்பு நடந்தது.
தற்போது அந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அவர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதற்காக ரூ. 1.60 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. வீடுகள் கட்டும் பணி முடிவடைந்து விட்டது. விரைவில் இந்த வீடுகள்ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications