தனி மனிதனை விட நாடு தான் பெரியது: கலாம் அறிக்கை
சென்னை:
தனி மனிதர்களை விட நாட்டின் நலன் மிக முக்கியமானது என்று ஜனாதிபதியாகவுள்ள விஞ்ஞானி அப்துல் கலாம்கூறியுள்ளார்.
தன்னை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தியுள்ளதையடுத்து நாட்டு மக்களுக்கு அவர் ஒரு விடுத்துள்ள செய்தியில்,
தேசத்தின் ஒட்டு மொத்த நம்பிக்கையின் அடையாளம் தான் ஜனாதிபதி பதவி. அந்தப் பதவிக்கு என் மீதுநம்பிக்கை வைத்து என்னை நிறுத்தியுள்ள நாட்டின் அரசியல் கட்சிகளுக்கும், தேசத்துக்கும் நான் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த திங்கள்கிழமையில் இருந்து தொலைபேசி அழைப்புகள், இ-மெயில்கள் என வாழ்த்து மழையில் மூழ்கிக்கிடக்கிறேன். இது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உண்மையில் என்ன சொல்வது என்றே எனக்குத்தெரியவில்லை.
இன்டர்நெட்டிலும் பத்திரிக்கைகள் சார்பிலும் தேசத்துக்கு உங்கள் செய்தி என்ன என்று கேட்டுக் கொண்டேஇருக்கிறார்கள். நான் என்ன செய்தியை மக்களுக்குச் சொல்வது என்று புரியவில்லை.
எனக்கு கீதையில் கிருஷ்ணர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அதுவும் நல்லதே நடக்கிறது. எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்.
பள்ளிக் குழந்தைகளுடன் எனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை இங்கே சுட்டிக் காட்டுவது நல்லது என்றுநினைக்கிறேன். போர்பந்தரில் 3,000 பள்ளிக் குழந்தைகள் மத்தியில் நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது10ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவி தைரியமாய் எழுந்தாள்.
என்னிடம் சார், எங்களைப் போன்றவர்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டாள்அந்த மாணவி.
நான் சொன்னேன், என் அருமை குழந்தைகளே.. எந்த ஒரு தனி மனிதனையும் விட தேசம் தான் பெரியது, தேசம்தான் மிக முக்கியமானது என்ற நினைப்பை வேத மந்திரமாக மனதில் நிறுத்திக் கொண்டு வளருங்கள். இது தான்எனது செய்தி என்று கூறினேன்.
இன்றும் அது தான் என் மக்களுக்கு நான் சொல்லும் செய்தி என்று கூறியுள்ளார் அப்துல் கலாம்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications