அமைதி பேச்சுக்கான தேதி: நார்வே குழு இலங்கை வருகை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

தாய்லாந்தில் நடக்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாள் குறிப்பது குறித்து விவாதிக்க நார்வே தூதுக் குழுஅடுத்த வாரம் கொழும்பு வருகிறது.

நார்வே வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எரிக் சோல்ஹைம் தலைமையில் இந்தக் குழு கொழும்பு வருகிறது.

போர் நிறுத்த ஒப்பந்ததின்போது இலங்கை அரசு கொடுத்த சில உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததால் இந்தப்பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள புலிகள் தரப்பில் ஆர்வம் காட்டப்படவில்லை.

தங்கள் மீதான தடையை முதலில் நீக்க வேண்டும் என்று புலிகள் கூறியுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பாகஇருந்து கொண்டு பேச்சு நடத்த இஷ்டமில்லை என புலிகள் தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து தடையை நீக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. இது தொடர்பாக இந்தியாவிடமும் பிரதமர்ரணில் விக்கிரமசிங்கே விளக்கிவிட்டார். இலங்கை அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும் ஆதரிப்பதாகஇந்தியா தெரிவித்துவிட்டது.

தடையை நீக்கும் நடவடிக்கைகள் கடந்த வாரம் தொடங்கிவிட்டன. இதனால், பேச்சுவார்த்தைக்கான தேதியைஇறுதி செய்ய உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக நார்வே கருதுகிறது.

இலங்கை அரசுடன் பேசிவிட்டு இந்தக் குழு புலிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+