வென்றது அதிமுக... தோற்றது தேர்தல் கமிஷன்: இல.கணேசன் வர்ணனை
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் வென்றது ஜெயலலிதாவாக இருந்தாலும் தோற்றது தேர்தல் கமிஷன் தான் எனபாரதீய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் தேர்தல் கமிஷனின் செயல்பாடு படு மோசமாக, ஒருதலைப்பட்சமாக இருந்தது.
கிராம அதிகாரி தரும் ஜாதிச் சான்றிதழ்களைக் காட்டி வாக்களிக்க அனுமதித்தது தவறு. முதலில் நடந்த ஓட்டுப்பதிவில் அதைக் காட்டி வாக்களிக்க அனுமதித்தார்கள்.
பின்னர் நடந்த மறுவாக்குப் பதிவில் சாதிச் சான்றிதழுக்கு தடை போட்டார்கள். இதன் மூலம் தேர்தல் கமிஷனேதெளிவில்லாமல் செயல்பட்டது. முதலில் ஜாதிச் சான்றிதழ்களை பயன்படுத்தி வாக்களிக்க அனுமதித்ததே தவறு.
தேர்தல் கமிஷன் இன்றும் இரண்டு முறை இது மாதிரி நடந்து கொண்டால் அதன் மீது மக்களுக்கு உள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் காணாமல் போய்விடும்.
சைதாப்பேட்டையைப் பொறுத்தவரை அதிமுக வென்றிருக்கலாம். ஆனால், தோற்றது தேர்தல் கமிஷன் தானேதவிர பிற கட்சிகள் அல்ல என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications