For Quick Alerts
For Daily Alerts
Just In
தீவிரவாதிகள் தாக்குதல்: பரூக் அப்துல்லா உயிர் தப்பினார்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி நடந்தது. ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
ஸ்ரீநககரில் பெமினா என்ற இடத்தில் இன்று காலை ஒரு புதிய அரசுப் பள்ளிக் கட்டடத்தை அவர் திறந்து வைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது இரு கிரனைட் குண்டுகள் அவரை நோக்கி சுடப்பட்டன.
ஒரு குண்டு வானத்திலேயே வெடித்துவிட்டது. இன்னொரு குண்டு கட்டடத்தின் உள்ளே இருந்த நீர்த் தேக்கத்தில்விழுந்து வெடித்தது.
இதனால் பரூக் அப்துல்லா அதிரஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இந்தக் கிரனைட்கள் குண்டுகள் துப்பாக்கிகள்பொறுத்தி சுடப்படும் ரகத்தைச் சேர்ந்தவை.
பள்ளிக் கட்டடத்தின் வெளியில் இருந்து துப்பாக்கிகளில் பொறுத்தி இந்த கிரனைட் வெடிகுண்டுகளைதீவிரவாதிகள் சுட்டுள்ளனர்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Comments
Story first published: Saturday, June 15, 2002, 5:30 [IST]