கராச்சி குண்டுவெடிப்பு: திடுக்கிடும் தகவல்கள்
கராச்சி:
கராச்சியில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் நேற்று நடந்த குண்டுவெடிப்பு குறித்து திடுக்கிடும் தகவல்வகள்வந்துள்ளன.
அந்த காரில் வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு தீவிரவாதி அதை ஓட்டி வந்து தூதரக சுவரில் மோதியதாகமுதலில் கருதக்கப்பட்டது. ஆனால், அதை தீவிரவாதி ஓட்டி வரவில்லை என்று தெரியவந்துள்ளது.
அந்தக் காரில் வெடிகுண்டு இருப்பது தெரியாமல் அதை 4 பெண்கள ஓட்டிச் சென்றபோது தான் குண்டு வெடித்ததுஎன்றும் தெரியவந்துள்ளது.
தூதரகத்துக்கு அருகே உள்ள டிரைவிங் ஸ்கூலுக்குச் சொந்தமான டயோடா கொரலா காரில் தீவிரவாதிகள்வெடிகுண்டுகளை மறைத்து வைத்தனர். இது தெரியாமல் அந்தக் காரை பெண்கள் 4 பேர் ஓட்டிச் சென்றனர்.ஒருவர் டிரைவிங் ஸ்கூல் டியூட்டர் மற்ற பெண்கள் கார் ஓட்ட கற்றுக் கொள்ள வந்தவர்கள்.
அவர்கள் தூதரகத்துக்கு அருகே காரை ஓட்டிச் சென்றபோது வெடிகுண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம்தீவிரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர்.
நேற்று சிதறிக் கிடந்த காரில் 3 பெண்கள் இருந்தனர். ஆனால், பெண்கள் இருந்ததால் அந்தக் காரில் குண்டுஇருந்திருக்க வாய்ப்பில்லை என நேற்று போலீசார் நினைத்துவிட்டனர். அருகில் இருந்த இன்னொரு வெளிளைநிற டயோட்டா காரில் தான் குண்டு வைத்து தீவிரவாதி மோதியிருக்க வேண்டும் என நினைத்தனர்.
ஆனால், சம்பவ இடத்தில் நடந்த முழுச் சோதனையில் இந்த புதிய திடுக்கிடும் விவரம் தெரியவந்துள்ளது.
இந் நியிைல் இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்து.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு அல்-கானுன் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.பின் லேடனின் அல்-கொய்தா தீவிரவாதக் கும்பல் தான் இவ்வாறு பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாகக்கருதப்படுகிறது.
இத் தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள அனைத்து அமெரிக்கத் தூதரகங்களும் மூடப்பட்டுவிட்டன.இறந்தவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் தான். காயமடைந்த 6 தூதரக ஊழியர்களில் ஒருவர் அமெரிக்கர்மற்றவர்கள் பாகிஸ்தானியர்கள்.
இது போன்ற தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போரை தடுத்துவிட முடியாது என்றுஅந் நாட்டு அதிபர் புஷ் கூறியுள்ளார். இந்தத் தீவிரவாதிகள் தீவிர முஸ்லீம் பற்றுடையவர்கள் என்கிறார்கள்ஆனால், முஸ்லீம்களையே கொல்கிறார்கள். இவர்களை ஒடுக்க அமெரிக்கா எல்லா நடவடிக்கையும் எடுக்கும்என்றார்.
இதற்கிடையே இந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரிக்க தனது எப்.பி.ஐ. படையை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறதுஅமெரிக்கா.












Click it and Unblock the Notifications