ஒருவருக்கு ஒரு பதவி: பதவியைத் துறந்தார் அதிமுக எம்.எல்.ஏ.
அச்சிறுப்பாக்கம்:
ஒருவருக்கு ஒரு சட்டம் அமலுக்கு வந்த பின்னர் அந்த சட்டத்தின் கீழ் தனது ஒரு பதவியை அச்சிரப்பாக்கம் எம்.எல்.ஏ. பூவராகமூர்த்திராஜினாமா செய்துள்ளார்.
ஒருவருக்கு ஒரு பதவி சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. சென்னை மேயர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து கொண்டு வரப்பட்டுள்ளதுஇந்தச் சட்டம்.
இதனால் ஸ்டாலின் தனது ஒரு பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இருப்பினும் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. பூவராகரமூர்த்தி தனது அச்சிரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியை ராஜினாமாசெய்துள்ளார். ஒருவருக்கு ஒருவர் சட்டத்தின் கீழ் ராஜினாமா செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு தனது ஊராட்சி பதவியை ராஜினாமா செய்யும் முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் தான் அதிமுக எம்.எல்.ஏவானார் இவர்.