டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்
டெல்லி:
கராச்சியில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் நடந்த குண்டுவெடிப்பையடுத்து டெல்லியில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தூதரகங்களுக்கு மிக பலத்த காவல்போடப்பட்டுள்ளது.
பல்வேறு வெளிநாட்டு தூதரக ஊழியர்கள் தங்கியுள்ள பகுதிகளில் போலீசாரின் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்கொலைப் படைத் தாக்குதல்கள் டெல்லியும் நடக்கலாம் என உளவுப் பிரிவினர் மத்திய அரசைஎச்சரித்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகம் மீது நடந்த தாக்குதலுக்கு பின்லேடனின் அல்-கொய்தாஅமைப்பு தான் காரணம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மொரக்கோவில் பிடிபட்ட 3 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலின் பின்னணியில் பின் லேடன் இருப்பதாககூறியுள்ளனர். இந்த 3 தீவிரவாதிகளையும் அமெரிக்க எப்.பி.ஐ படையும் மொராக்கோ போலீசாரும் நடத்தியகூட்டு வேட்டையில் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி உள்பட உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் சொத்துக்களைத் தாக்குமாறு பின் லேடன்உத்தரவிடடுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து டெல்லியில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை,பாதுகாப்புத்துறை, நிதித்துறை ஆகியவை அமைந்துள்ள முக்கிய கட்டடங்களுக்கும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications