ஆகஸ்ட் 1-ல் காங்கிரஸ்- த.மா.கா. இணைகின்றன
டெல்லி:
காங்கிரஸ்- த.மா.கா. இரு கட்சிகளும் ஆகஸ்ட் 1ம் தேதி இணையவுள்ளன. இந்த இணைப்பு விழா சென்னையில்நடக்கவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காரணமாக காங்கிரஸ்- த.மா.கா. இணைப்பு தாமதமாகியுள்ளது.
காங்கிரஸ்- தமிழ் மாநில காங்கிரஸ் இணைப்பு குறித்து இறுதிச் சுற்றுப் பேச்சு நேற்று நடப்பதாக இருந்தது. அதுஒத்திவைக்கப்பட்டு இன்று நடந்தது.
இணைப்பு தேதி குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை த.மா.கா. தலைவர் வாசன்உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது இந்த இணைப்புத் தேதி முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக அடுத்த மாதம் 15ம் தேதி காமராஜர் நூற்றாண்டு விழா வருகிறது. அந்த தினத்தில் இரு கட்சிகளும்இணையலாம் என்று முதலில் இரு தரப்பினரும் திட்டமிட்டிருந்தனர். அந்த தினத்தில் மதுரை அல்லது காமராஜர்பிறந்த விருதுநகரில் சோனியா தலைமையில் விழா நடத்தி இரு கட்சிகளையும் இணைக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அடுத்த மாதம் 15ம் தேதி தான் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அனைத்து எம்.பிக்களும்எம்.எல்.ஏக்களும் வாக்களிக்க வேண்டும். இதனால், அந்த தினத்தில் இணைப்பு விழாவை நடத்த இயலாதசூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு இணைப்பு விழா நடக்கிறது. இணைப்பு விழாவை சென்னையில் நடத்துவதுஎன்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.