For Quick Alerts
For Daily Alerts
Just In
காவல்துறையை கண்டித்து கருணாநிதி தலைமையில் இன்று பொதுக் கூட்டம்
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலின்போது ஆளுங்கட்சியனருடன் சேர்ந்து கொண்டு காவல்துறையினரும் முறைகேடுகளைசெய்ததாக கூறி அதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று இரவு (திங்கள்கிழமை) சென்னையில் கண்டன பொதுக்கூட்டம்நடக்கிறது.
இதில் திமுக தலைவர் கருணாநி கலந்து கொண்டு பேசுகிறார்.
தங்கசாலை மணிக்கூண்டு அருகே இந்தப் பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன்,சென்னை மேயர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி மற்றும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டுபேசுகிறார்கள்.
இதே காரணத்திற்காக நாளை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஆர்பாட்டம்நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் பொருளாளர் ஆர்காடு வீராசாமி தலைமை தாங்குகிறார்.
Comments
Story first published: Monday, June 17, 2002, 5:30 [IST]