டெல்லிக்கு வர வழி தெரியுமே
சென்னை:
என்னைக் கூப்பிட்டு செல்வதற்காக எதற்காக டெல்லியிலிருந்து வருகிறீர்கள்? எனக்கு வரத் தெரியுமே என்று மத்திய அமைச்சர்பிரமோத் மகாஜனிடம் டாக்டர் அப்துல் கலாம் கூறினார்.
பாரத ரத்னா அப்துல் கலாம் செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.இதையொட்டி திங்கள்கிழமை அவர் டெல்லி செல்கிறார். அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்வதற்காக மத்திய அமைச்சர்மகாஜன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை வந்தார்.
லிமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய மகாஜன் கூறியதாவது:
என்னை சென்னைக்கு வரவே கலாம் விடவில்லை. டெல்லியில் இருந்தவண்ணம் டாக்டர் கலாமுடன் தொடர்பு கொண்டு,உங்களை அழைத்துச் செல்வதற்காக நான் சென்னை வருகிறேன் என்று கூறினேன்.
ஆனால், எதற்காக நீங்கள் சென்னை வர வேண்டும். எனக்கே டெல்லி வர வழி தெரியுமே. எதற்காக நீங்கள் வீணாக அலையவேண்டும். நானே வந்துவிடுகிறேன் என்றார் கலாம்.
அதற்கு நான், டாக்டர் சாப், இப்போது நான் பிரதமரின் உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும். நான் உங்களை நேரில் வந்துகூட்டிச் செல்லாவிட்டால் பிரதமர் என்னை சும்மா விட மாட்டார். குடியரசுத் தலைவர் ஆன பிறகு வேண்டுமானால் நீங்கள்சொல்வதை நான் கேட்கிறேன்.
இப்போது நான் சொல்வதை தயவு செய்து நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றேன்.
அதன் பின்னர் தான் என்னை சென்னைக்கு வரவே அனுமதித்தார் கலாம் சாப். அவர் நாம் நினைப்பதைவிடவும் மிகஎளிமையான, மிக எதார்த்தமான, சொல்லப்போனால் அதிசயமான மனிதர் என்றார் மகாஜன்.












Click it and Unblock the Notifications