நூறு ஜெயலலிதா வந்தாலும் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க முடியாது: ஸ்டாலின்
புதுக்கோட்டை:
தமிழக அரசு முடிந்தால் எனது எம்.எல்.ஏ. பதவியை பறிக்கட்டும் பார்க்கலாம் என்று சென்னை மேயர் ஸ்டாலின் சவால்விட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், மாநகராட்சி தேர்தலில் 2-வது முறையாக நான் வெற்றிபெற்றதை ஜெயலலிதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அது மட்டுமல்லாமல், அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் நடந்த முறைகேடுகள், திறமையின்மையை சுட்டிக் காட்டிசட்டசபையில் பேசியதால் என் மீது அவர் அளவு கடந்த கோபத்தை அடைந்தார்.
இதையடுத்தே எனது மேயர் பதவியைக் குறி வைத்து சட்டம் இயற்றினார். ஒரு தனி மனிதனுக்காக சட்டம் கொண்டு வந்ததுஇந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.
எந்த நாட்டிலும் இப்படி நடக்காது. ஆட்சியாளர்கள் என்னதான் செய்தாலும், நாட்டு மக்களுக்காக நான் உழைப்பதை யாராலும்தடுத்து நிறுத்த முடியாது.
அவரால் எனது மேயர் பதவியை மட்டுமே பறிக்க முடியும். ஆனால் நூறு ஜெயலலிதாக்கள் வந்தாலும் எனது எம்.எல்.ஏ.பதவியை பறிக்க முடியாது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications