மாட்டுக் கறி சாப்பிட்ட 10 பேர் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே மாட்டுக் கறி சாப்பிட்ட 10 பேர் மயங்கி விழுந்தனர்.
ஈரோடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் திங்கள்கிழமை இரவு ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
விருந்தின்போது மாட்டு இறைச்சி பரிமாறப்பட்டது. இதை சாப்பிட்ட 10 பேர் வாந்தி எடுத்தனர். பின்னர் தலைசுற்றி மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மாட்டு இறைச்சி கெட்டு விட்டதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications