முஷாரபின் அணுகுண்டு பிளாக்மெயில்: இந்தியா கண்டனம்
டெல்லி:
பாகிஸ்தானின் அணு ஆயுத பிளாக்மெயிலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று தனது நாட்டின் அணு ஆயுத விஞ்ஞானிகளுக்கு பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்விருந்தளித்தார். அதில் குப்புற கவிழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றரீதியில் வாய்க்கு வந்ததைபேசினார்.
இந்திய ராணுவ நடவடிக்கைக்கும், சர்வதேச நெருக்குதலுக்கும் பணிந்து தீவிரவாதிகளை ஒடுக்க முன் வந்துள்ளார்முஷாரப். இதையடுத்து தனது தாக்குதல் திட்டத்தை இந்தியா கைவிட்டது.
ஆனால், அணு ஆயுத விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய அவர், பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதால்தான் இந்தியா நம்மைத் தாக்க பயந்து கொண்டு போரைத் தவிர்த்தது என்று கூறினார்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர்நிருபமா ராவ் நிருபர்களிடம் கூறுகையில்,
இது பாகிஸ்தானின் பொறுப்பற்ற பேச்சாகும். அணுகுண்டுகளைக் காட்டி பிளாக்மெயில் செய்ய பாகிஸ்தான்முயல்கிறது. இந்த பிளாக்மெயிலை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.