மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை: கவுன்சலிங் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்சி (நர்சிங்), பி.பார்ம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கான கவுன்சலிங் இன்று முதல்தொடங்கியது.

இந்தப் படிப்புகளில் சேர மொத்தம் 14,000 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பம் செய்தவர்கள் பிளஸ் டூ தேர்விலும், நுழைவுத் தேர்விலும் பெற்ற மதிப்பெண்களை வைத்து ரேங்க்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 300க்கு 300 பெற்று சரவணகுமார் என்ற மாணவர் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு முதல் சீட் இன்றுஒதுக்கப்பட்டது. சென்னையில் கல்வியமைச்சர் தம்பிதுரை இவருக்கு எம்.பி.பி.எஸ். சீட் வழங்கினார்.

மற்ற மாணவர்களுக்கான கவுன்சலிங்கையும் தொடங்கி வைத்தார். காலை 9.30 முதல் 11.30 வரையிலும்பிற்பகலில் 2 மணி முதல் 3.30 மணி வரை இந்த கவுன்சிலிங் நடக்கும். 22ம் தேதி வரை இந்த கவுன்சலிங் நடக்கும்.

இன்று கவுன்சலிங்கில் 300க்கு 295.48 வரை கட்-ஆப் வைத்துள்ள 400 மாணவர்களுக்கு கவுன்சலிங் நடக்கிறது.

கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்வி ஆணைய அலுவலகத்தில் இந்த கவுன்சலிங்நடந்து வருகிறது.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,258 எம்.பி.பி.எஸ். சீட்கள் உள்ளன. இதில் 835 சீட்களுக்கு இந்தகவுன்சலிங் மூலம் இடம் ஒதுக்கப்படவுள்ளது. இவர்களுக்கு அடுத்த மாதம் கல்லூரி தொடங்கும்.

பி.ஈ மாணவர்களுக்கு...

மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர கவுன்சிலிங்குக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமாணவர்களின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிடுகிறது.

இந்த மாணவர்களுக்கான கவுன்சலிங் வரும் 24ம் தேதி தொடங்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+