கிளைடர் விபத்தில் பலியான என்.சி.சி.மாணவி குடும்பத்துக்கு நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தாம்பரம் விமான பயிற்சித் தளத்தில் கிளைடர் விமானம் விழுந்து நொறுங்கியதில் பலியான கல்லூரி மாணவி சத்யாவின்குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையை என்.சி.சி. வழங்கியது.
விமானம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அது கீழே விழுந்து நொறுங்கியதில் சென்னை குருநானக் கல்லூரி என்.சி.சி. மாணவிசத்யா பரிதாபமாக இறந்தார். விமானப் படையைச் சேர்ந்த பயிற்சியாளரும் உயிரிழந்தார்.
இதையடுத்து சத்யாவின் குடும்பத்திற்கு ரூ. 2லட்சம் வழங்கப்படும் என என்.சி.சி. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல் கட்டமாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை சத்யாவின் தந்தை ரகுநாதனிடம், என்.சி.சி. இணை இயக்குனர் கமாண்டர் பி.பி.சிங்நேரில் சென்று வழங்கினார். மீதமுள்ள ரூ. 1 லட்சம் சில வாரங்களில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications