For Quick Alerts
For Daily Alerts
Just In
ரயில் வராத ஊரிலும் இனி முன்பதிவு வசதி
வேலூர்:
ரயில் வராத அல்லது நிற்காத சிறிய ஊர்களிலும் கூட கம்ப்யூட்டர் ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஓ.ராஜகோபால் கூறியுள்ளார்.
வேலூரில் ரயில்வே பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்றகம்ப்யூட்டர் முன்பதிவு வசதி செய்யப்படவுள்ளது. அதில் 19 மையங்கள் தமிழகத்தில் அமையவுள்ளன.
இதன் மூலம், ரயில்கள் வந்து செல்லாத, நிற்காமல் செல்லக் கூடிய இடங்களில் வசிக்கக் கூடிய மக்கள் அடுத்த ஊருக்குப் போய் தான் ரயில்டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டும் என்ற தொல்லை நீங்கும் என்றார்.
முன்னதாக கொடைக்கானலில் ரயில்வே முன் பதிவு மையத்தை துவக்கி வைத்த ராஜகோபால், தேனிக்கும் - சபரி மலைக்கும் இடையேரயில் விடுவது குறித்து யோசித்து வருவதாகக் கூறினார்.
Comments
Story first published: Wednesday, June 19, 2002, 5:30 [IST]