இது துக்ளக் தர்பார்: ஸ்டாலின்
சென்னை:
தனது பதவிப் பறிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்டாலின் கருணாநிதியை விடவும் உறுதியாக இருந்தார்.
அவர் கூறுகையில், மக்கள் பணியாற்ற அரசு பதவி தேவையில்லை. பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது கடமையை தொடர்ந்து செய்வேன்.இந்த தீர்ப்பு என்னை, எனது பணியை எந்த விதத்திலும் பாதிக்காது.
ஒருவேளை எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருந்தால் மாநகராட்சி மன்றத்தையே இந்த ஆட்சியாளர்கள் கலைத்திருப்பார்கள். அதிமுக அரசு துக்ளக் தர்பாரைநடத்திக் கொண்டுள்ளது.
நாளை முதல் மக்களை சந்திக்கப் போகிறேன். சென்னையில் உள்ள ஒவ்வொரு தொகுதியாகச் சென்று மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பேன். கடந்த ஐந்துஆண்டுகளாக நான் மேயராக இருந்தபோது சென்னை மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு ஒரு சிறு இடையூறும் ஏற்படாத விதத்தில் பணிகளைசெய்துள்ளேன். அதை மக்கள் அறிவார்கள்.
ஆனால் என்னால் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை முடித்துக் கொடுக்க முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் தான் இருக்கிறது என்றார்ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications