கோட்டையில் இன்னொரு பெண் தற்கொலை முயற்சி
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்நேற்று தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
தலைமைச் செயலக வளாகத்தில் நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்வோர் மற்றும் முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவந்ததால் முதல்வர் ஜெயலலிதா கடுமையான எச்சரிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.
மேலும், முதல்வரிடம் மனு கொடுக்க வருவோருக்கு உதவியாக மன நல மருத்துவர்கள் கொண்ட ஆலோசனைக் குழுக்களும்அமைக்கப்பட்டன. இதையடுத்து சில வாரங்களாக தற்கொலை முயற்சி எதுவும் நடக்காமல் இருந்து வந்தது.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 36 வயது அழகம்மாள் என்ற பெண் மண்ணெண்ணை ஊற்றிதீவைத்துக் கொள்ள முயன்றார். அப்போது போலீஸார் தலையிட்டு அந்தப் பெண்ணைத் தடுத்தனர்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
அழகம்மாளுக்கும், அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் பணத் தகராறு இருந்து வந்ததாம். இதையடுத்தே அவர் கோட்டைக்குவந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications