சென்னையில் கோவில் தேர் கவிழ்ந்து பக்தர் பலி
சென்னை:
சென்னையில் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட தேர் கவிழ்ந்ததில் பக்தர் ஒருவர் உடல் நசுங்கி இறந்தார்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ளது சத்யநாராயணா கோவில். இந்தக் கோவிலுக்காக ரூ. 6.5 லட்சம்செலவில் புதிதாக தேர் ஒன்று செய்யப்பட்டது.
கோவிலில் சிறப்பு பூஜையையொட்டி இன்று உற்சவமூர்த்தியுடன் அந்தத் தேர் வீதி உலா வந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் மிக வேகமாக இழுக்கப்பட்டது. இதனால் வேகமாக உருண்டு வந்த அந்தத் தேர் சாலைத் தடுப்பில் திடீரெனமோதியது. மேலே கேபிள் வயரிலும் சிக்கியது. இதில் நிலை குலைந்த அந்தத் தேர் கவிழ்ந்தது.
கவிழ்ந்த அந்தத் தேர் பக்தர் ஒருவரின் மீது சரிந்து விழுந்தது. இதில் அவர் உடல் நசுங்கி இறந்தார். மேலும்இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையின் கிரேன் உதவியுடன் இந்தத் தேர் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த அசம்பாவிதச் சம்பவம் நடந்துவிட்டதால் பரிகார பூஜைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவிலின்பட்டர் மோகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications