சிவசேனா தலைவரை மிரட்டிய அல்-உம்மா ஆசாமி கைது
சிவகாசி:
சிவகாசியில் பொட்டு வைத்துக் கொண்டு தெருவில் போகக் கூடாது என்று கூறிய அல்- உம்மா தொண்டர் போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி பராசக்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக் கனி. இவர் மாநில சிவசேனா துணைத் தலைவராக உள்ளார். இவர் சின்னப் பள்ளிவாசல் தெரு வழியாக சென்றுள்ளார்.
அப்போது அவரை இப்ராகிம் என்ற ஜின்னா வழி மறித்துள்ளார். பொட்டு வைத்துக் கொண்டு இந்தப் பகுதி வழியாக வரக் கூடாது. அப்படியாராவது மீறி பொட்டு வைததுக் கொண்டு இந்தப் பகுதி வழியாக வந்தால் அவர்களைக் கொலை செய்து விடுவேன். நான் அல்- உம்மாதொண்டன் என்று கூறி மிரட்டினாராம்.
இதையடுத்து பிச்சைக் கனி போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ஜின்னாவை போலீஸார் கைது செய்தனர்.
இவன் அல்- உம்மா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்களும் முஸ்லீம்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.