பி.இ. நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
சென்னை:
பி.இ. நுழைவுத் தேர்வில் மதுரையைச் சேர்ந்த மாணவர் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.. பிளஸ் டூவில் வாங்கியமதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து இந்த ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கீழ்கண்ட இன்டர்நெட் முகவரிகளிலும் இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அவை,
இந்த ரேங்க் பட்டியலில் மதுரை மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். மதுரை எல்லீஸ் நகர் சிவகாசி நாடார் மெட்ரிகுலேஷன்பள்ளியில் படித்தவர் ஹாரிஸ் அகமது. இவர் பி.இ. நுழைவுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். பிளஸ் டூ தேர்வில் இவர்1200 மதிப்பெண்களுக்கு 1181 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
தனது வெற்றிக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கடவுளின் ஆசிர்வாதமே காரணம் என்றார் ஹாரிஸ் அகமது.
இவர் நுழைவுத் தேர்வி 300க்கு 299.43 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தை கோவில்பட்டியைச் சேர்ந்த காவ்யா (299.43), மூன்றாவது இடத்தை திருச்சியைச் சேர்ந்த ஆனந்தி (299.18)ஆகியோர் பிடித்துள்ளனர்.
இந்த ரேங்க்கை அடிப்படையாக வைத்து 25ம் தேதி கவுன்சிலிங் நடைபெறும். 224.47 மதிப்பெண் பெற்றவர்கள் இதற்குஅழைக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications