வறண்டது காவிரி: உழவு மாடுகளை விற்கும் நிலையில் விவசாயிகள்
தஞ்சாவூர்:
காவிரியில் நீர் வராத காரணத்தால் தஞ்சை மாவட்டத்தில் குறுவைப் பயிர் கருக ஆரம்பித்துள்ளது.
கடனை வாங்கி உழவு செய்துள்ள விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு விவசாய வங்கிகளில் விதை நெல்லைகடன் வாங்கி, பூச்சி மருந்தை கடன் வாங்கி இந்த விவசாயிகள் குறுவைப் பயிரை நட்டனர்.
ஆனால், காவிரியில் சரியான நேரத்தில் நீர் விட கர்நாடகம் மறுத்துவிட்டது. இதனால் பால் பிடிக்கும் பருவத்தில் இருந்த பயிர்கள் வாடஆரம்பித்துவிட்டன. இந்தப் பயிர் விளைவது நிச்சயம் இல்லை என்றாகி விட்டதால் அதை நம்பி வேறு கடனும் வாங்க முடியாத நிலைக்குசிறிய விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பலர் உழவு மாடுகளை விற்று வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
மேலும் பலர் வேறு கூலி வேலைகளுக்குப் போக ஆரம்பித்துள்ளனர். உடனே காவிரியில் நீர் வந்தால் தவிர ஆயிரக்கணக்கான ஏக்கர்நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெல் தப்புவது மிக மிகக் கடினம்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் எவ்வளவோ போராடியும் அரசிடம் இருந்து உரிய பதில் இல்லை என்பதால் வெறுத்துப் போய்உள்ளனர்.
இதனால் இந்தப் பிரச்சினையில் பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு பயிர்களை காக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது. அக் கட்சியின்எம்.பி. விஜயக்குமார் பிரதமர் வாஜ்பாய்க்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
நாகப்பட்டனம் மக்களவைத் தொகுதி எம்.பியான விஜயக்குமார் எழுதியுள்ள கடிதத்தில்,
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நிலையை நேரில் ஆராய மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும்.
போதுமான தண்ணீர் இல்லாமல் 15 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் உடனடியாக தலையிட்டு கர்நாடகத்திலிருந்துகாவிரி நீரை திறந்து விடுமாறு அம் மாநில முதல்வர் கிருஷ்ணாவை வற்புறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.