பெரம்பலூர் அருகே கிராமங்களில் காலரா தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே காலரா நோய் பரவியுள்ளது.
பெரம்பலூர் அருகே பனையூர், உலகம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்களுக்குவாந்தியும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவக் குழுக்கள் அந்தகிராமங்களுக்கு விரைந்தன. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை பெரம்பலூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனிக்காமல் இருவர் இறந்தனர். இதில் ஒருவர் முதியவர்.
பலரும் காலாராவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications