தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்: 1,000 பேர் கைது
மதுரை:
ஸ்டாலினிடம் இருந்து சென்னை மேயர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர்இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கத்திப்பாரா சந்திப்பில் நேரு சிலை அருகே திமுகவினர் இன்று காலை சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்.பி. பொன். மாணிக்கவேல்தலைமையிலான போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் பல திமுகவினர் காயமடைந்தனர். இதைப் படம் பிடித்த சன் டிவி கேமரமேனுக்கும் நிருபருக்கும் அடிவிழுந்தது. இவர்களை மாணிக்கவேல் தாக்கி கேமராவைப் பறித்தார்.
சிறிது நேரம் கழித்து கேமராவைத் தந்த மாணிக்கவேல் அதிலிருந்து கேசட்டை தர மறுத்துவிட்டார். அதில்திமுகவினரை போலீசார் தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில்....
மதுரையிலும் ஸ்டாலின் பதவிப் பறிப்பைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. கட்டபொம்மன் சிலைஅருகே நடந்த இந்தப் போராட்டத்தில் மேயர் செ. ராமச்சந்திரன், துணை மேயர் சின்னச்சாமி உள்ளிட்டநூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டையில்...
புதுக்கோட்டையிலும் திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 100 திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர்.
இதே போல தர்மபுரி, கரூர், நாகப்பட்டிணம், திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்துபோராட்டங்கள் நடந்து வருகின்றன.
தங்கள் கட்சியைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications