ராஜ்குமார் கடத்தலை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி கோபால் வழக்கு
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரி நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்தக் கடத்தல் தொடர்பாக போலீசார் இவர் மீது தொடர்ந்துள்ள வழக்கு சம்பந்தமாக அவர் நேற்று சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்ஆனார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இன்று முதல் பத்து நாட்களுக்கு அவர் போலீஸ் விசாரணைக்கு உட்பட வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த விசாரணைக்கு உட்படுவேன் என்று கோபால் கூறியுள்ளார்.
இதற்கிடையே ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக வீரப்பனையும் என்னையும் தொடர்புபடுத்தி தமிழக அரசு தவறான குற்றம்சாட்டியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுகோரியும் கோபால் சென்னை உயர் நீதிமன்ற்ததில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.