திருப்பூரில் ஜெயலலிதா: மிக பலத்த பாதுகாப்பு
திருப்பூர்:
முதல்வர் ஜெயலலிதா இன்று திருப்பூர் சென்றார்.
திருப்பூரில் அவர் பல்வேறு நலத் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்தார். அவரது வருகையையொட்டி நகர்முழுவதும் மாபெரும் வரவேற்பு வளைவுகள், பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பல கி.மீ. தூரத்துக்கு அதிமுக கொடிகள் சாலைகளின் இரு பக்கமும் கட்டப்பட்டுள்ளன.
முன்னதாக தனி ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா சென்னையில் இருந்து திருப்பூர் புறப்பட்டார். அவரைஅமைச்சர்கள், மேயர் பொறுப்பேற்கவுள்ள கராத்தே தியாகராஜன் ஆகியோர் விமான நிலையத்தில் வழியனுப்பிவைத்தனர்.
திருப்பூர் வந்திறங்கிய ஜெயலலிதாவை அமைச்சர் தம்பிதுரை உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டர்,போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
திருப்பூரில் வைத்து அவரைக் கொல்லப் போவதாக பாரத மகளிர் விடுதலைப் புலிகள் இயக்கம் மிரட்டல்விடுத்துள்ளால் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் நடந்த விழாவில் கோயம்புத்தூர் நகருக்கான பல்வேறு திட்டப் பணிகளையும் ஜெயலலிதா துவக்கிவைத்தார்.