For Daily Alerts
Just In
நாளை முதல் கராத்தே தியாகராஜன் மேயர்
சென்னை:
சென்னை மாநகராட்சியின் தாற்காலிக மேயராக வெள்ளிக்கிழமை பிற்பகலில், துணை மேயர் கராத்தே தியாகராஜன் பொறுப்பேற்பார்என்று தெரிகிறது.
சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலினின் பதவியை புதிய சட்டம் மூலம் தமிழக அரசு பறித்துள்ளது. இதையடுத்து மேயர் பதவிதற்போது காலியாக உள்ளது.
இந் நிலையில் துணை மேயர் கராத்தே தியாகராஜனே தற்காலிக மேயராக பொறுப்பு வகிப்பார் என்று மாநகராட்சி கமிஷனர் கலைவாணன்தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எப்போது பதவி வகிப்பார் என்பது உறுதியாகத் தெரியாமல் இருந்தது.
தற்போது வெள்ளிக்கிழமை பிற்பகலில் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மேயர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது.இருப்பினும் பெரிய அளவில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.
Comments
Story first published: Thursday, June 20, 2002, 5:30 [IST]