ரூ. 25 லட்சம் கொடுத்தால் என்.ஆர்.ஐகளுக்கு மெடிக்கல் சீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டு இந்தியர்களிடமிருந்து ரூ.25 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படும்என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செம்மலை தெரிவித்தார்.

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கவுன்சலிங் நேற்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

இதற்காக இந்த ஆண்டு கூடுதலாக 315 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியில் 50இடங்களும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், சேலம் மருத்துவக் கல்லூரியில் 75இடங்களும், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் 40 இடங்களும் மற்றும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் 50 இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் வெளிநாட்டு இந்தியர்களுக்காக (என்.ஆர்.ஐ.) மட்டும் 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சேரவிரும்பும் வெளிநாட்டு இந்தியர்கள் 50 ஆயிரம் டாலர்கள் (ரூ.25 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்றுசெம்மலை கூறினார்.

வெளிநாட்டு இந்தியர்களிடம் இவ்வளவு அதிகமாகப் பணம் வசூலிக்கும் முறையை கர்நாடக மாநிலம் தான்அறிமுகப்படுத்தியது. தற்போது அதே பாணியில் தமிழகத்திலும் தற்போது ரூ.25 லட்சம் வரை கட்டணமாகவசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஆண்டில் அவர்கள் ரூ.10 லட்சம் கட்ட வேண்டும் என்றும் அதற்கடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் தலா ரூ.5லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறிய செம்மலை, இந்தக் கட்டணம் மருத்துவக் கல்லூரிகளின் மேம்பாட்டுப்பணிகளுக்காகச் செலவழிக்கப்படும் என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+