மதப் பள்ளிகளுக்கு பாகிஸ்தான் புதிய கட்டுப்பாடு
இஸ்லாமாபாத்:
மதரஸாக்கள் எனப்படும் மதப் பள்ளிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.
தீவிரவாதிகளை உருவாக்குவதில் இந்த மதப் பள்ளிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற இந்தப் பள்ளிகளுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது. பதிவுசெய்யப்படாத மதரஸாக்கள் உடனடியாக மூடப்படும் என்றும், அரசின் நிதி உதவியைப் பெற வேண்டுமானால்மதக் கல்வியுடன் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் கல்வியையும் போதிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மதரஸாக்களில் வெளிநாட்டினர் சேர்ந்து படிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுகளைஒழுங்காக பராமரிக்க வேண்டும் எனவும், ஆண்டுதோறும் அரசிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.
முதலில் நூற்றுக்கணக்கான மதப் பள்ளிகளுக்கு அரசின் உதவி நிதியை பாகிஸ்தான் நிறுத்தியிருந்தது. இப்போதுஇந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என பாகிஸ்தானுககு உலக அளவில் கடும்நெருக்குதல் தரப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தீவிரம்:
இந்தியாவின் போர் மிரட்டலையடுத்து பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் நெருக்கடி பல மடங்குஅதிகரித்துள்ளது. தீவிரவாதிகளை தடுக்காவிட்டால் உலக வங்கியின் நிதி உதவியை நிறுத்துவோம் எனஅமெரிக்கா எச்சரித்துள்ளது.
தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதை அமெரிக்கா நேரடியாகக் கண்காணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு தர இருந்த போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் இப்போதைக்குத் தரமுடியாது என அமெரிக்கா கூறிவிட்டது.
ஆப்கானிஸ்தான் எல்லையைக் கண்காணிக்க இந்த விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் அமெரிக்காஇலவசமாக தரவுள்ளது. இவற்றின் மதிப்பு 73 மில்லியன் டாலர்களாகும். ஆனால், தீவிரவாதிகளை ஒடுக்குவதைபாகிஸ்தான் முழு அளவில் செயல்படுத்தினால் தான் இந்த உதவி கிடைக்கும் என்று கூறப்பட்டுவிட்டது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications