தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல்: ஆகஸ்ட் 19 முதல் இயங்கும்
தூத்துக்குடி:
தூத்துக்குடி- கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல்தொடங்குகிறது.
மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் இதனைத் தெரிவித்தார். சமீபத்தில்தூத்துக்குடி வந்த அவர் இது தொடர்பாக துறைமுக அதிகாரிகள், தரைவழிப் போக்குவரத்துத்துறைஅதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.
அப்போது இலங்கை கப்பல் போக்குவரத்துத்துறை பிரதிநிதிகளும் தூத்துக்குடி வந்தனர். அவர்களும் அமைச்சர்மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் துவக்க முடிவு செய்யப்பட்டது.ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி இதனைத் துவக்க முடிவெடுக்கப்பட்டது.
இதற்கான கப்பல்களை இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இயக்கம். ஒரு கப்பலில் 250 பயணிகள் பயணம்செய்யலாம். தூத்துக்குடியில் இருந்து 5.30 மணி நேரத்தில் இந்தக் கப்பல் கொழும்பு சென்றடையும்.
இந்தக் கப்பலில் ஏ.சி. வசதி கொண்ட பகுதிகளும் இருக்கும். கொழும்பு சென்று வர ரூ. 3,000 கட்டணமாகவசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரம் மூன்று முறை இந்தக் கப்பல் இயக்கப்படும்.